செவ்வாய், 14 டிசம்பர், 2010

லந்தலாலா கவிதைகள்! -by 'ரெட்சிப்'ரோபோ

லந்தலாலா கவிதைகள்! -by 'ரெட்சிப்'ரோபோ


செல்போன் நனைவதால்
பிடிக்கவில்லை
'சென்னை மழை!'

கொசுவின்
கடியினும்
கொடிது
அதன்
ராகமாலிகை!

பீட்டர் இங்லாண்டில்
பீட்டர்விடும்
பீட்டர் தம்பி
உள்ளே போட்டிருப்பதோ
பீத்த டவுசர்!

'அதிரசம்'‍
- ஒரு பலகாரத்துக்கும்
அதி ரசமாய்
பேர் வைத்தவன் தானடா
உண்மைத் தமிழன்!
'பத்து பேருக்கு
ஃபார்வர்டு செய்தால்
நல்லது நடக்கும்'என‌
நள்ளிரவில்
மெஸேஜியவனை
மேலுலகம்
'ஃபார்வர்டு' செய்!

காணாமல்போன‌
சிட்டுக்குருவிக்காய்
கட்டுரை எழுதும்
யாரேனும்
நம் சொந்த ரத்தம்
மூட்டைப் பூச்சிக்காய்
எழுதுங்களேன்!

ராமதாஸின்
மாம்பழத் தாகத்துக்கும்
மாஸாதான் தீர்வா?
இன்னமும்
மார்கழி மாதங்களில்
'உள்ளம் உருகுகிறார்' டி.எம்.எஸ்!
'செல்லாத்தா மாரியாத்தா'க்களை
துணைக்கு அழைக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி!

மதுரை தெப்பக்குளத்தை
கடக்கும் போதெல்லாம்
ஞாபகத்தில் வருது
மரிக்கொழுந்து வாசமும்..
ராமராஜன் லிப்ஸ்டிக்கும்!
ஆயிரம் தலைசீவிய
அபூர்வ சிகைமணி
'கோபி சலூன்!'

ஐந்திலும் வளையமாட்டேன்!
ஐம்பதிலும் வளையமாட்டேன்!
வேணும்னா
நூறுல வளைஞ்சிக்கிறேன்!

'உழைப்பே உயர்வைத் தரும்!'
எல்லாஞ்சரி..
யாருடைய உழைப்பு.. யாருக்கு?

நகரத்து வாழ்க்கையின்
இறுமாப்பைச் சொல்லி
பகலிலும் ஒளிருது
சோடியம் விளக்கு!

மரப்பாச்சி பொம்மை
செய்த பெருந்தச்சன்கள்
உலகமயமாக்கலில்
பெருந்துச்சமென ஆனார்கள்!

'ஏட்டு'சித்தப்பாவுக்கு ஏ.வி.எம் ராஜன் முகம்!
'எட்டாப்பு'சித்திக்கு ஊர்வசிசாரதா முகம்!
வாழ்க்கை துலாபாரமானதால்
குடும்பபாரம் சுமக்கிறாள்
போலீஸ் குவார்ட்டர்ஸில்
'ஆயாவாக!'

சந்தித்த‌
ஐந்தாம் நிமிடத்தில்
'அப்புறம்' என்பவனை
அப்புறம் எப்போதும்
சந்திக்காதே!

சாகா வரம் பெற்ற‌
எழுத்துக்குச் சொந்தக்காரன்
விபத்தில் மறித்துப்போனான்!

பொண்டாட்டியின்
தாலி அறுத்து
விஜய் கட்-‍அவுட்டுக்கு
பாலாபிஷேகம்
செய்தவன் பொண்டாட்டியின்
தாலி அறுத்தான்
அஜீத் ரசிகன்!


பேனுக்கும்
வலிக்குமென்று
'உச்'கொட்டி
ஈறெடுத்த அப்பத்தாக்கள்
ஈறேழு உலகத்திலும்
இப்போதில்லையடா!

'அண்டமெனும்
பண்டத்தில்
நீயொரு பிண்டம்'
இதை
புரிஞ்சுக்காதவன் எவனும்
பூமிக்குத் தண்டம்..
போடா முண்டம்!

காதலைச் சொன்னபொழுதில்
பாலகால ஔவையாராகி
‍'நண்பேன்டா'என்றவள்
காதல் மணம் செய்துகொண்டு
சூல்பெருத்த சூழ்ச்சியை
என்னவென்பேன்?

ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தாச்சு..
ரெண்டு குடம் தண்ணிஊத்தி
அந்தப் பூ செத்தாச்சு!

நந்தவனத்தில் ஓர் ஆன்ட்டி!- அவ
நாளொரு புருஷனை வேண்டி- கண்ணில்
கொண்டு வந்தாள் ஒரு தூண்டி! -அவ
புருஷன் ஆகிட்டான் எப்பவோ போண்டி!
ஜிகுஜிக்கான் ஜிகுஜிக்கான் ஜிக்கான்!‌

டே தம்பி!
ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும்
'ரெட்சிப்' இருக்கு
அது 'கப்சிப்'னு இருக்குறதுனால‌
வாழ்க்கை 'சப்'புனு இருக்கு!

எம்.ஜி.ஆர்...
நம்பியார்...
டே தம்பி!
ரெண்டுல நீ யார்?

தனியொருவனுக்கு
உணவில்லையெனில்
'டீ' வாங்கிக் கொடுத்திடுவோம்!

ராவானால்
ராவாக அடிக்கும்
ராஜேஷ் பயலையும்
மாவாவால்
வாயைக் கெடுத்த‌
மகேஷ் பயலையும்
காதலில் ஜெயிக்க வைத்தது
செல்வராகவன் சினிமா!

தேங்காப்பூ..
சுடுகஞ்சி..
கொஞ்சம் இனிப்பேந்தி
பாயாசமாச்சு
....விலாஸில்!


கன்ணெதிரே
கரையும்
குச்சி ஐஸ் வாழ்க்கை!
சீக்கிரம் தின்னு..
இல்லைனா மண்ணு!

பிரியாணி..
பிரியாமணி..
ஒற்றுமை ஒன்றுதான்
'லெக்பீஸ்' நன்றுதான்!

2 கருத்துகள்:

பாலா சொன்னது…

கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை.நண்பரே

Prabu Krishna சொன்னது…

எல்லாமே அருமை பாஸ்