செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

முத்தம் செய்!

தேவதையை
இதுவரை நான் கண்டதில்லை
ஆனால் நிச்சயம்
உன் சாயலில் இருப்பாள்!

 செல்போன்கள் மாறினாலும்
ந‌ம்காதலுக்கு மட்டும் உண்டு
லைஃப் டைம் வேலிடிட்டி!

கண்ணாடி பார்த்து
திருத்தம் செய்கிறாய்
இனி கண்ணாடி
தன்னை திருத்திக் கொள்ளும்!



'அஜீத் சூர்யாவைவிட
நீ தான்டா அழகு!'‍
பொய் சொன்ன வாய்க்கு
முத்தம் வைக்கிறேன்!

காலை
மாலை
இரவு
- டாக்டரின் பிரஸ்கிரிப்ஷன் போல்
மூவேளை முத்தத்தால்
உயிர்த்துக் கிடக்குதென் ‌
இதயம்!   


காபி என்று
 எதையோ கொடுத்தாய்
 கஷாயம் தோற்றது..
நீ மிச்சம் வைத்த
 தேநீர் மட்டும்
 தேனாய் இனித்தது!


சுதந்திரமாய்
 பட்டொளி வீசி
 கொடியில் பறக்குது
 உன் தாவணி!

தேனிலவு அழைத்துபோகா
முட்டாள் கணவன்
நானாகத்தான் இருப்பேன்..
'நம் வாழ்க்கையே நீண்ட தேனில‌வுதானே' என்றாய்!



வெள்ளாவி வச்சு உன்னை
 வெளுக்கவும் இல்லை
 வெயிலுக்கு காட்டாமல் உன்னை
 வளர்க்கவும் இல்லை..
 ஆனாலும்
 யாத்தே யாத்தே எனக்கு என்னாச்சோ!


'போனவாரம்தானே கொடுத்தேன்' என்கிறாய்
 'அது போனவாரம்'என்கிறேன் நான்
 உனக்கு எப்போதும் நான்‌
காதல் கைப்புள்ள தான்!



'என்னைவிட்டுப் போயிடாதடா' என்கிறாய்
நான் பிரிந்து செல்வதே
உன்னைவிட்டு எப்போதும்
பிரியாமல் இருக்கத்தான்!


என்ன பாவம் செய்தாய்
என் கண்ணில் விழுந்தாய்...
என்ன புண்ணியம் செய்தேன்
என் கண்ணில் விழுந்தாய்!

உனக்கு கிறித்தவ மதம்
 பிடித்துவிட்டுப் போகட்டும்...
எனக்கு காதலிக்கும்போது மட்டுமே
மதம் பிடிக்கும்!

என் காதலை நிராகரித்த பெண்களுக்காய்
இப்போது கோவிலே  கட்டலாம்
உனக்கு தாலியைத் தவிர என்ன கட்டலாம்?

உன் ஞாபக மழையில்
நனைந்து நனைந்து
எனக்கு ஜலதோஷம்
இப்போது தும்மினாலும்
உன் சத்தம்!

என் கவிதைகளுக்கு கருவானவள்
எனக்கும் சேர்த்து கரு சுமந்தாள்!


    2 கருத்துகள்:

    arslan சொன்னது…

    nice :-)

    arslan சொன்னது…

    Nice.. :-)